×

மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 5 பேர் கைது

 

சேலம், ஆக.14: ஆத்தூர் அடுத்துள்ள தம்மம்பட்டி அருகில் இருக்கும் நாகியம்பட்டியில் மனமகிழ் மன்றம் நடத்தி வரும் சுந்தரவதனம் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தம்மப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் செயல்பட்டு வந்த மனமகிழ் மன்றத்தில் கும்பலாக அமர்ந்துகொண்டு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இச்சூதாட்டத்தில் ஈடுபட்ட தம்மம்பட்டி தண்ணீர்பந்தல் மாரியப்பன், முருகன், சந்திரன், பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், உலிபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த சின்னராசு ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மனமகிழ் மன்ற உரிமையாளர் சுந்தரவதனம் தப்பிவிட்டார். அரசின் தடையை மீறி பணம் வைத்து சூதாடியதாக சுந்தரவதனம் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ₹8,730 பணம், 3 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மனமகிழ் மன்ற உரிமையாளர் சுந்தரவதனத்தை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

The post மனமகிழ் மன்றத்தில் சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sunderavanam ,Nagiyambatti ,Dammambatti ,Atur ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்